கன்னியாகுமரி மாவட்டம் மாணவர்களுக்கு புகையிலை விற்றவர் கைது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 13 September 2024

கன்னியாகுமரி மாவட்டம் மாணவர்களுக்கு புகையிலை விற்றவர் கைது.


கன்னியாகுமரி மாவட்டம் மாணவர்களுக்கு புகையிலை விற்றவர் கைது.


கன்னியாகுமரி மாவட்டம் பழுகல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மத்தம்பாலை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்ததாக விஜயன் என்பவரை போலீசார் கைது செய்து குழித்துறை சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி சுந்தரவதனம் ஆட்சியர் அழகு மீனாவிற்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவை தொடர்ந்து விஜயனை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் இன்று போலீசார் அடைத்தனர். காவல்துறையின் எச்சரிக்கையை மீறி புகையிலை விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.என்.சரவணன்

No comments:

Post a Comment