மாநில அளவில் நடைபெற்ற உடல் வலுதூக்கும் போட்டியில் வெற்றிபெற்ற ஆயுதப்படை காவலரை நேரில் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு உடல் வலு சங்கமும் குமரி மாவட்ட உடல் வலு சங்கமும் இணைந்து நடத்திய 15 வது மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி கடந்த 25.08.2024 ம் தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் முதல் நிலைக்காவலர் 2907 திரு.மகேஸ்வரன் அவர்கள் 75 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இன்று 02-09-2024 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் வெற்றி பெற்ற காவலரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என். சரவணன்
No comments:
Post a Comment