கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 6 October 2024

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்


கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்


குமரிமாவட்ட திராவிடர்கழக இளைஞரணி  கலந்துரையாடல் கூட்டம்  நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து  நடைபெற்றது திராவிடர்கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமை தாங்கி உரையாற்றினார். திராவிடர்கழக மாவட்டத்  தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் .  மாவட்ட தி.க துணைத்தலைவர் ச. நல்ல பெருமாள்  மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு ,  செயலர் பெரியார்தாஸ் மாணவரணி செயலாளர் இரா.கோகுல் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.  மாவட்ட திக இளைஞரணி செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் வரவேற்புரையாற்றினார் .மற்றும் தோழர்கள் சந்தோஷ், அரிஷ், செல்லையா உட்பட பலர் பங்கேற்றனர்


 மறைவுற்ற கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, குமரிமாவட்ட கழகத்தோழர் சி.காப்பித்துரையின் வாழ்விணையர்  ஜோஸ்பின் இராஜேஸ்வரி ஆகியோருடைய மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது, குமரிமாவட்டத்தில்  திராவிடர்கழக இளைஞரணியைப் பலப்படுத்த கடுமையாக உழைப்பது, பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டங்கள், ஒன்றிய கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி இயக்கத்தைப் பலப்படுத்துவது, இயக்க ஏடுகளான விடுதலை, உண்மை, இதழ்களுக்கு சந்தா சேர்ப்பது  உள்ளிட்ட சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்


எஸ். அலெக்சாண்டர் மாவட்ட இளைஞரணி தலைவர், இரா.இராஜேஷ் இளைஞரணி செயலாளர், சந்தோஷ் குமார் இளைஞரணி துணைத்தலைவர், அரிஸ் மாநகர இளைஞரணி அமைப்பாளர்

No comments:

Post a Comment