கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் குளச்சல் ஆகிய புதிய தாலுகாக்களை உருவாக்க திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு கோரிக்கை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 6 October 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் குளச்சல் ஆகிய புதிய தாலுகாக்களை உருவாக்க திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு கோரிக்கை


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் குளச்சல் ஆகிய புதிய தாலுகாக்களை உருவாக்க திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு கோரிக்கை


குமரிமாவட்டத்தில் மிகப்பெரிய வட்டமாகவும், அதிக மக்கள் தொகைகொண்டவட்டமாகவும் அகஸ்தீஸ்வரம் மற்றும் கல்குளம் வட்டங்கள் உள்ளது. அதிக வருவாய் கிராமங்கள் இந்த வட்டங்களில் உள்ளது. அதிக மக்கள் தொகை உள்ளதால் இந்த வட்டாட்சியர் அலுவலகங்களில்  பணியாற்றும் அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாக உள்ளன.   இதனால் வருவாய்த்துறையின் சான்றிதழ் மற்றும் இதர தேவைகளுக்கும் பொதுமக்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே நிர்வாக வசதிக்காக அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள கன்னியாகுமரி , சுசீந்திரம் ஆகிய குறுவட்டங்களையும் இராஜாக்க மங்கலம் குறுவட்டத்தில் உள்ள மதுசூதனபுரம் தெற்கு, பறக்கை, தெங்கம்புதூர், புத்தளம் ஆகிய வருவாய் கிராமங்களையும் இணைத்து அகஸ்தீஸ்வரம் வட்டம் என்ற தற்போதைய பெயரிலே செயல்பட வேண்டும் இதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தைத் கன்னியாகுமரியிலே அமைக்க வேண்டும் எனவும், பழைய அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள இதர குறுவட்டங்கள் இதர வருவாய் கிராமங்களையும் இணைத்து நாகர்கோவில் வட்டம் என்ற பெயரில் புதிய வட்டத்தினை உருவாக்கி இப்போதைய வட்டாட்சியர் அலுவலகமே அலுவலகமாக செயல்பட வேண்டும், அது போல கல்குளம் வட்டத்தை இரண்டாக பிரித்து குளச்சலில் குளச்சல் வட்டம் உருவாக்க வேண்டும் என குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என திராவிடர்கழக மாவட்டச் கோ.வெற்றி வேந்தன் தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment