தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை
தமிழ் நாட்டில் ஒன்பது ஆண்டு காலம் பொற்கால ஆட்சி செய்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வி புரட்சிக்கும் வித்திட்டு இந்தியாவிலேயே அந்த காலகட்டத்தில் முதல் அமைச்சர்களுக்கு எல்லாம் முதல்வராக திகழ்ந்து ஜாதி மத இனத்திற்கு அப்பாற்பட்டு எல்லோராலும் போற்றப் பட்டவரும் தமிழ் நாட்டின் முக்கிய அணைகளை கட்டி விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட மாபெரும் திட்டங்களை தீட்டி ஒட்டு மொத்த தமிழக மக்களால் போற்றப்பட்டு, இன்றும் பெருந்தலைவர் என்றால் அது கர்ம வீரர் "காமராஜர்" தான் என்ற நிலையில் இருக்கும் போது காங்கிரஸ் கட்சி சம்பந்தமாக சிலரால் அடிக்கப்படும் போஸ்டர் மற்றும் பிளக்ஸ் போடுகளில் பெருந்தலைவர் காமராஜர் படத்தை போடாமல் இருப்பது அவர்களது அறியாமையா அல்லது வேண்டும் என்று செய்கிறார்களா என்பது தெரியவில்லை. எனவே இனிமேல் காங்கிரஸ் கட்சியினர் யாராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி சம்பந்தமாக போடப்படும் விளம்பரங்களில் பெருந்தலைவர் காமராஜர் படத்தை காங்கிரஸார் அனைவரும் போட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.அது தான் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் தெரிவித்துக் கொண்டார்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment