ஆழ்கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு ஏற்கனவே தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது அதே வேளையில் தமிழகத்தின் மேற்கு கடல் பகுதிகளான அரபிக் கடல் பகுதிகளில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது எனவே அரபிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்புமாறு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவுறுத்தியுள்ளார் வரும் 31-ஆம் தேதிக்குள் அனைவரும் கரை திரும்பி விட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
குமரி மாவட்ட மீன் பிடி துறைமுகங்களிலோ அல்லது கேரளா உள்ளிட்ட பிற மீன் பிடி துறைமுகங்களிலோ விசைப்படகுகளை கரை ஒதுக்கி குமரி மாவட்ட மீன் வளத்துறையினருக்கு கரை ஒதுக்கிய தகவலை பதிவு செய்யுமாறும் கேட்டு கொண்டு உள்ளார்.
No comments:
Post a Comment