சட்ட தேர்வில் (Law Exam ) அதிக மதிப்பெண் எடுத்த பயிற்சி காவலர்களுக்கு புத்தகம் வழங்கி பாராட்டிய மாவட்ட கண்காணிப்பாளர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

சட்ட தேர்வில் (Law Exam ) அதிக மதிப்பெண் எடுத்த பயிற்சி காவலர்களுக்கு புத்தகம் வழங்கி பாராட்டிய மாவட்ட கண்காணிப்பாளர்.

மாதாந்திர  சட்ட  தேர்வில் (Law Exam ) அதிக மதிப்பெண் எடுத்த பயிற்சி காவலர்களுக்கு புத்தகம் வழங்கி பாராட்டிய மாவட்ட குமரி காவல் கண்காணிப்பாளர்.


கன்னியாகுமரி மாவட்டம்,ஆயுதப்படையில் இன்று (27.05.2022)வாரந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.இதில் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் IPS கலந்து கொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


மேலும் அவர் பணி செய்யும் போது காவலர்கள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் தங்கள் உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும், பணியின் போது பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்..


பின்பு பயிற்சி காவலர் பள்ளியில் பயிற்சி பெற்று வரும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து, பயிற்சி பற்றிய அறிவுரைகளை வழங்கினார், மேலும் நடைபெற்ற மாதாந்திர சட்ட தேர்வில் (Law Exam) அதிக மதிப்பெண் பெற்ற பயிற்சி காவலர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டுகளை தெரிவித்தார்.

No comments:

Post a Comment