சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு தயார் செய்து வழங்கிடும் முறையை நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு அந்தந்த மையங்களில் காலை சிற்றுண்டி தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கிடவும் அரசு ஊழியருக்கு 58 வயது இருந்து 60 ஆக உயர்த்தி போல் சத்துணவு ஊழியர்களின் பணி காலத்தை 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தி வழங்கிடவும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடவும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்து விடும் வகையில் மாவட்ட அளவிலான பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment