30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த பள்ளி மாணவர்கள், பொரி உருண்டை, ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து அன்பை பரிமாற்றி கொண்டனர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 May 2022

30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த பள்ளி மாணவர்கள், பொரி உருண்டை, ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து அன்பை பரிமாற்றி கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 30 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியில் படித்த பழைய மாணவ மாணவிகள், பொரி உருண்டை, ஆரஞ்சு மிட்டாய் கடலை உருண்டை, நூல் மிட்டாய் சுற்று, போன்ற பழங்கால தின்பண்டங்கள் உடன் சந்திப்பு. ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசீர் பெற்றனர்.


பள்ளிப்பருவம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மறக்க முடியாத அனுபவம். அதிலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்த பள்ளி பருவ தோழர் தோழிகளை சந்திப்பது என்பது மகிழ்ச்சியான அனுபவம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரம் அன்ன விநாயகர் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் அனைவரும் இன்று அதே பள்ளியில் சந்தித்தனர். 


ஒவ்வொருவரும் பல்வேறு நிலைகளில் தொழில்களில் பதவிகளில் இருக்கும் நிலையில் அவர்கள் அனைவரும் இன்று ஒன்றாக கூடி பள்ளி காலத்தில்ருசித்த ஆரஞ்சு மிட்டாய் கடலை உருண்டை பொரி உருண்டை நூல் மிட்டாய் சுற்று போன்ற பொருள்களை வாங்கி வந்து ஒருவருக்கொருவர் பழங்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். 


இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பழைய மாணவர்கள் அனைவரும் அப்போதைய தலைமை ஆசிரியரையும் நிகழ்ச்சிக்கு வரவழைத்து அவரது காலில் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment