கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறுவர்களை செல்போன், மற்றும் பப்ஜி போன்ற சமூக அவலங்களில் இருந்து மீட்டு அதிக அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்க சர்வதேச தரத்தில் விளையாட்டு மையம் துவக்கம். வியட்நாமில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிநவீன தரை விரிப்பு மற்றும் கருவிகள். ஆஸி விளையாட்டு பயிற்சி மையத்தை மாநகராட்சி மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை அருகே ஆஸி விளையாட்டு அமைப்பு சார்பில் அதிநவீன வியட்நாம் தரைவிரிப்புகள், இரவை பகலாக்கும் மின்னொளி, 20 அடி உயரம் கொண்ட பாதுகாப்பு வேலிகளுடன் சர்வதேச தரத்திலான விளையாட்டு பயிற்சி மையம் ஒன்று இன்று துவக்கப்பட்டது.
இதனை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் துவக்கி வைத்தார். இந்த மையத்தில் அதிக அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது கால்பந்து கிரிக்கெட் போன்ற பல்வேறு விளையாட்டுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மழை காலங்களிலும் பத்து நிமிடங்களில் தண்ணீர் வடியும் அளவிலான வியட்நாம் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட தரைவிரிப்புகள் மற்றும் நவீன கருவிகளுடன் இந்த மையம் செயல்படத் தொடங்கியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாணவ மாணவியருக்கும் பெண்களுக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் மூலம் இங்கு பயிற்சியில் வழங்கப்படுவதாகவும். இதன்மூலம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பப்ஜி விளையாட்டு செல்போன் மோகத்திலிருந்து சிறுவர்களை மீட்க முடியும் என்று உரிமையாளர் ஆசிப் தெரிவித்தார்.
No comments:
Post a Comment