அந்தமானில் இருந்து மீன் பிடிக்க சென்று இந்தோனேசியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த குமரி மீனவர் மரிய ஜெசின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 8 மீனவர்களுடன் அந்தமான் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி ஆழ்கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது விசைப்படகுடன் 8 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்தோனேசியா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இந்திய வெளியுறவு துறை அமைச்சரகம் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் 4 பேரை ஏற்கனவே விடுவிக்கபட்டிருந்த நிலையில் சிறையில் இருந்த மரிய ஜெசின், இம்மானுவேல் ஜோஸ், சிஜின் ஸ்டிபன், ஜோமோன் ஆகிய நான்கு மீனவர்களில் தூத்தூர் பகுதியை சேர்ந்த மரிய ஜெசின் உடல் நல குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் குமரி மாவட்டத்திற்கு கொண்டுவரபட்டு ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரியில் உடற்கூறாய்வு செய்யபட்டது அதை தொடர்ந்து உடல் சொந்த ஊரானா தூத்தூருக்கு கொண்டுவரபட்டு அடக்கம் செய்யபட்டது.
முன்னதாக உயிரிழந்த மீனவரின் உடலுக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், குமரி எம்பி விஜய்வசந்த், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் இதேபோல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 5லட்ச ரூபாய் நிவாரணமும், குமரி எம்பி விஜய்வசந்த் 2லட்ச ரூபாயும் எம்எல்ஏ ராஜேஷ்குமார் லட்ச ரூபாயும் நிவாரணமும் உயிரிழந்த மீனவர் மரிய ஜெசின் தாய் தாயாரிடம் வழங்கினர்.
No comments:
Post a Comment