கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி முப்பெரும் விழா நடந்தது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும் போது "அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சம் உயர்ந்து தற்போது 53 லட்சமாக உள்ளது. அதிகபடியனா ஆசிரியர்கள் தேவைபடும் இடத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும்.
பள்ளிக்கல்வித்துறை க்கு தமிழக அரசு 38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வேறு எந்த ஆட்சியில் இந்த அளவுக்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது கிடையாது, தமிழகத்தில் தற்போது 10 ஆயிரத்து 300 க்கு மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் கட்ட பணிகள் மேற்கொள்ளபடுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பள்ளிகளில் கழிப்பிடங்கள் உட்பட 18 ஆயிரம் கட்டடங்கள் கட்டப்பட உள்ளது.
பேரறிவாளன் விடுதலை குறித்து அரசியல் பார்க்காமல் அனைவரும் குரல் கொடுத்துள்ளனர். ராஜூவ் காந்தி குடும்பத்தினரே மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பேரறிவாளன் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment