பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நூதன போராட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 May 2022

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நூதன போராட்டம்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நூதன போராட்டம்.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுவித்ததை கண்டித்து பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாயில் வெள்ளை துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. 


இந்த வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் எந்த குற்றம் செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்கள் விடுதலை பெறலாம் என்ற ஒரு தவறான முன்னுதாரணம் இந்த நீதிமன்ற தீர்ப்பு மூலம் வெளியாகி உள்ளது கண்டனத்துக்குரியது என கூறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment