நாகர்கோயில் மேலப்பெருவிளை பகுதியை சேர்ந்த ஆரோக்கிய பாலன் என்பவர் 25 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார் தினமும் தன்னுடைய பசுமாடுகளை அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம் இந்நிலையில் இன்று காலை பசுமாடுகள் அந்தப் பகுதியில் புல் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது அந்தப் பகுதியில் சரிந்த நிலையில் இருந்த மின்கம்பத்தில் உள்ள ஸ்டே கம்பியில் மின்சார கம்பி உரசியதால் ஸ்டே கம்பியில் மின்சாரம் பாய்ந்தது இதில் அருகில் மேய்ந்து கொண்டிருந்த 9 மாத கர்ப்பம் ஆன பசுமாடு ஸ்டே கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
சரிந்த நிழலில் இருக்கும் மின்கம்பத்தை உடனே சரிசெய்ய வேண்டும் என்று பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் கொடுத்தோம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பசு மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார் மேலும் இந்தப் பகுதியில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்தச் சாலை வழியாக சென்று வருவதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை.
மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் வாயில்லா ஜீவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment