புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனே அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், பெண் ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனே அறிவிக்க வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பெறும் உரிமையை மீண்டும் வழங்கப்படவேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெண் ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இதில் கலந்துகொண்ட அரசுக்கு எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
No comments:
Post a Comment