கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரக்கள்விளை பகுதியில் உள்ள தனியார் பள்ளி தாளாளர் ஆண்றனி பிரபு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது பள்ளி நிர்வாகப் பிரச்சினை காரணமாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நோட்டுப் புத்தகங்களை விற்பனை செய்யும் நபரும் அவரது மனைவியும் பள்ளிக்கு வந்து நிர்வாகம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்தனர். இதனை தட்டி கேட்டபோது என்னையும், பள்ளி ஊழியர்களையும் தாக்கியதுடன் சில பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தம்பதியினர் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி அந்த மனுவில் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அதே தம்பதியினர் மற்றும் சிலருடன் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து அலுவலக கதவின் பூட்டை உடைத்து பள்ளியில் உள்ள பெண் ஊழியரின் புடவையை அவிழ்த்து தாக்கியதும் செல்போனை உடைத்தும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளி ஆசிரியர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி விட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது.
இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இது குறித்து பள்ளி முதல்வர் ரமிளா கோட்டார் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என ஆசிரியர்கள் வேதனை பெண் ஊழியரை தாக்கிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment