கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே களியங்காட்டில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்ற தனியார் மருத்துவமனையை திறந்து வைத்தார், பின்னர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் " தமிழகத்தில் எய்ம்ஸ் கல்லூரிக்கான கட்டுமான பணிகளை துவங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வரின் முயற்சி காரணமாக இந்த ஆண்டு கூடுதலாக 50 மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ராமநாதபுரத்தில் படித்து வருகின்றனர். தமிழகத்தில் 800 அரசு மருத்துவமனைகள் மற்றும் 900 தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் காப்பீடு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய்க்கான இயந்திரம் உட்பட பல்வேறு கருவிகள் மற்றும் புதிய பிரிவுகள் துவங்கப்பட உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை துவங்க தொழிலாளர் நலத் துறை அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது அனுமதி கிடைத்ததும் விரைவில் இஎஸ்ஐ மருத்துவமனை துவங்கப்படும்.
தமிழகத்தில் ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு வெளிப்படையான இடமாற்றம் இன்று முதல் செயல்பட துவங்கும் என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எம் பி எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment