காங்கிரீட் கல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று குமரி மாவட்ட ஆட்சியர்.அரவிந்திடம் காங்கிரீட் கல் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய கேட்டு மனு அளிக்கப்பட்டது, இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரீட் கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் திரண்டு வந்து மனு அளித்தனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்" குமரி மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட காங்கிரீட் கல் தயாரிக்கும் உற்பத்தி நிலையங்கள் உள்ளது,இதில் 15,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் அதிகம் பேர் பட்டதாரி இளைஞர்கள் இவர்கள் தற்போது இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர், இந்நிலையில் கனிமவளங்கள் கடத்தப்படுவதாலும், பல்வேறு குவாரிகள் மூடப்பட்டதாலும் காங்கிரீட் கல் தயாரிக்கும் மூலப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதனால் தற்போது தொழில் இல்லாமல் காங்கிரீட் கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தைப் பொறுத்த வகையில் தற்போது கட்டுமான தேவைகளுக்கு காங்கிரீட் கல் அதிக அளவில் பயன்பட்டு வருகிறது, எனவே காங்கிரீட் கல் உற்பத்திக்கு உரிய மூலப்பொருட்களை மாவட்ட நிர்வாகம் பற்றாக்குறை இல்லாமல் கிடைக்க வழிவகை செய்து தரவேண்டும் மேலும் காங்கிரீட் கல் தயாரிக்க தேவையான கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, ஆகவே கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நூற்றுக்கு மேற்பட்ட கன்னியாகுமரி மாவட்ட காங்கிரீட் கல் உற்பத்தியாளர்கள் திரண்டு வந்து மனு அளித்தாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment