தேசிய அளவில் வெற்றி பெற்ற குத்துசண்டை (KickBoxing)வீரர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 May 2022

தேசிய அளவில் வெற்றி பெற்ற குத்துசண்டை (KickBoxing)வீரர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கன்னியாகுமரி மாவட்டம், தேசிய அளவிலான குத்துசண்டை (KickBoxing) போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  நடைபெற்றது.


இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் பங்கேற்றனர், மேற்படி நடைபெற்ற போட்டியில் குமரி மாவட்டத்தை  சேர்ந்த வீரர்கள் கிறிஸ்டோபர் மற்றும் ரஹமத் சாபீக் ஆகியோர் தங்கப்பதக்கமும்,மற்றோரு வீரர் அஜித் வெண்கல பதக்கமும், பரமேஷ் என்ற 12 வயது வீரர் வெள்ளி பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர்.


குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இன்று (24.05.2022) குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். குத்துசண்டை போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற வீரர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment