கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான பொறியாளர் மற்றும் தொழிலார்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் " கட்டிடப் பணிகளுக்கு தேவையான சிமெண்ட் கம்பி ஆகிய பொருள்கள் 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களுக்கு தேவை ஜல்லி கல் போன்ற பொருள்கள் வரத்து அறவே நின்று போனது. இதுபோன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக மாவட்டம் முழுவது கட்டுமான தொழில்கள் முடங்கியது - மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். எனவே கட்டுமான பொருள்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு கல் ஜல்லி போன்ற பொருள்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொறியாளர்கள் மற்றும் தொழிலார்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment