கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே உள்ள என்.எஸ்.கே. கலைவாணர் அரங்கம் நாகர்கோவில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது 30 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பாக கட்டப்பட்ட இந்தக் கலை அரங்கத்திற்கு கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அரங்கம் என அரசு பெயர் சூட்டியது தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அரங்கம் சீரமைக்கப்பட்டு வருகிறது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகதிற்காக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த மகேஷ் பணியாற்றிவருகிறார்.
இன்று நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் என் எஸ் கிருஷ்ணன் கலைவாணர் அரங்கம் கலைஞர் அரங்கமாக பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது இந்த தீர்மானத்திற்கு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது பாஜக அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் பாஜக அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் ஏற்கனவே கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் என்ற பெயரில் இருப்பதால் அதிக பெயரையே சீரமைக்கப்பட்ட கட்டிடத்திற்கும் தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தனர் ஆர்ப்பாட்டதிலும் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment