கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகராட்சி சீரமைக்க பட்ட கட்டிடத்தில் ஏற்கனவே இருந்த கலைவாணர் என்ற பெயரை மாற்றி கலைஞர் என பெயர் மாற்றம் தீர்மானத்திற்கு நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் வாக்குவாதம் தள்ளுமுள்ளு நடைபெற்றதை தொடர்ந்து இன்று நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானம் நிறை வேற்றப்பட்டது - திமுகவினர் கொண்டு வந்த மாநகராட்சி கட்டிட பெயர் மாற்றம் பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே உள்ள என்.எஸ்.கே. கலைவாணர் அரங்கம் நாகர்கோவில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது 30 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பாக கட்டப்பட்ட இந்தக் கலை அரங்கத்திற்கு கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அரங்கம் என அரசு பெயர் சூட்டியது தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அரங்கம் சீரமைக்கப்பட்டு வருகிறது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகதிற்காக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த மகேஷ் பணியாற்றிவருகிறார் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் என் எஸ் கிருஷ்ணன் கலைவாணர் அரங்கம் கலைஞர் அரங்கமாக பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது இந்த தீர்மானத்திற்கு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது பாஜக அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதனை தொடர்ந்து இன்று நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில நிர்வாகி ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி செயலாளர் நவீன், காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட கூட்டத்தில், உலக அதிசியமான மாத்தூர் தொட்டி பாலம், ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை, அரசு போக்குவரத்துக்கு கழகம், அரசு ரப்பர் கழகம் ஆகிய நிறுவனங்களை இந்த மாவட்ட வளர்ச்சிக்காக தந்த பெரும் தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானம் நிறை வேற்றப்பட்டது - திமுக அரசு செய்ய தவறினால் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றும் என அரசுக்கு காங்கிரஸ் சார்பில் எச்சரிக்கை விடுவிக்கப்ட்டு உள்ளது.
திமுக மேயரின் செயல்பாடு சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை போல உள்ளதாக கூறபடுகிறது.
No comments:
Post a Comment