நாகர்கோவில் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில் ஜுவல்லரியில் வைத்து சமூக சேவை செய்த பெண்ணுக்கு தங்க நாணயம் வழங்கி கௌரவ படுத்தப்பட்டது.
கன்னியாகுமரி கடற்கரை பகுதியை சேர்ந்த ஏழைப் பெண்மணியான இவர் கடந்த ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் காலங்களில் தினமும் தனது ஏழ்மை நிலையை கூட பொருட்படுத்தாமல் தன்னால் முடிந்த உதவிகளை முஸ்லிம்களுக்கு செய்துவந்தார்,இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. இந்நிலையில் அந்தப் பெண்ணை நாகர்கோவில் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நகை கடை நிறுவனத்தார் வரவழைத்து அவருக்கு சால்வை அணிவித்து தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தினமலர் பதிப்பாளர் தினேஷ் கலந்துகொண்டு அந்தப் பெண்ணுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் தங்க நகை கடை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment