கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவு போட்ட வாரணாசி நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு.
கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவு போட்ட வாரணாசி நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள இடலாக்குடி இளங் கடையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 8 ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு எதிராக வும் வழிபாட்டுத் தலங்களை நீதி மன்றங்கள் மூலமாக முடக்கம் செய்யும் செயல்களும் நடந்து வருவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
No comments:
Post a Comment