கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்னும் ஊரைச் சேர்ந்த நீலகண்ட பிள்ளை என்பவர் கடந்த 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி பிறந்தார்.நாளடைவில் கிறிஸ்துவராக மதம் மாறிய இவர் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தில் திருமுழுக்கு பெற்று தனது பெயரை தேவசகாயம்பிள்ளை என மாற்றினார். பின்னர் 1752 ஆவது ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி தேவசகாயம் பிள்ளை ஆரல்வாய்மொழி அருகே காற்றாடி மலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு புனிதர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 15ஆம் தேதி போப்பாண்டவர் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டத்தை வழங்கினார்.
இதற்காக இதற்காக இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் அருகே நன்றி தெரிவிக்கும் பெருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவில் போப் ஆண்டவருக்கான இந்திய தூதர் லெயோ போல்டா ஜிரல்லி, அகில இந்திய ஆயர் பேரவை தலைவர் ஆஸ்வால்டு கிராசியாஸ், தமிழக சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்பிக்கள் விஜய் வசந்த், ஞானதிரவியம் மற்றும் எம்.எல்.ஏக்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment