கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி இன்று தொடங்குகிறது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி இன்று தொடங்குகிறது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபமும், அதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.


திருவள்ளுவர் சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு இந்த ரசாயன கலவை பூசப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு ரசாயனக் கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணிகள் நடைபெறவில்லை.


இதையடுத்து இந்த ஆண்டு ரசாயன கலவை பூச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிட்டனர்.


பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணிக்காக டெண்டர் விடப்பட்டது. ரசாயன கலவை பூசும் பணி இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இதனால், இந்த பணிகள் முடியும் வரை சுமார் 5 மாதங்கள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை ரசாயன கலவை பூசும் பணியை மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார் உடன் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்   . 

No comments:

Post a Comment