சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கிய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கிய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் (Monthly Crime Meeting) மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், அரசு குற்ற வழக்கறிஞர்கள், குழந்தைகள் நல அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர் , வட்டார போக்குவரத்து ஆய்வாளர், மின்சார துறை பொறியாளர் மற்றும் அனைத்து காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சென்ற மாதத்தில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு திருட்டு வழக்குகளில்  குற்றவாளிகளை கைது செய்து திருட்டு பொருள்களை மீட்ட தனிப்படையினர் மற்றும் செயின் பறிப்பு வழக்குகளில் குற்றவாளிகளை பிடித்து திருட்டு பொருள்களை மீட்ட தனிப்படையினர் தங்களது புலன்விசாரணயில் இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை விரைந்து முடித்த காவல் அதிகாரிகள், கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்களை விற்ற குற்றவாளிகளை கைது செய்த  தனிப்படையினர், நீதிமன்ற நடைமுறைகளின் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், குற்றவாளிகளை கைது செய்ய அதிகாரிகளுக்கு உதவிப்புரிந்த  தனிபிரிவு காவலர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment