புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான தனிப்படையினர் நடத்திய விசாரணையில், தேவசகாயம் மவுண்ட் நடுத்தெருவை சேர்ந்த ஜோஸ் என்பவரது மனைவி ரெப்சி (30) என்பவர் மீது சந்தேகப்பட்டு அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தான் நகையை நைசாக திருடியது தெரியவந்தது. ஏற்கனவே ரெப்சி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகையை திருடி விட்டு சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கட்டிட தொழிலாளி வீட்டிலும் திருடியுள்ளார். அதாவது சகாய செல்வராஜன் வீட்டில் நெருங்கி பழகியபடி ரெப்சி நடித்துள்ளார். பின்னர் ஆளில்லாத நேரத்தை கண்காணித்து அவருடைய வீட்டுக்குள் நைசாக புகுந்து பீரோவில் இருந்த 9½ பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் திருடிய நகையை வடக்கன்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் நகையை அங்கு சென்று மீட்டனர். மேலும் ரெப்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment