உலக சைக்கிள் தினத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ராஜாஸ் பள்ளி மாணவ மாணவிகளின் சைக்கிள் பேரணி நடந்தது.
போக்குவரத்திற்கு எத்தனையோ வாகனங்கள் வந்தபோதிலும் சைக்கிளுக்கு இணையாக உடற்பயிற்சி தரும் ஒரு வாகனம் இல்லை என்பதை வலியுறுத்தும் விதமாகவும்,இன்று உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ராஜாஸ் பள்ளி மாணவ மாணவிகளின் சைக்கிள் பேரணி நடந்தது.
இதனை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணியின் போது சைக்கிளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக பதாதைகளை ஏந்தி சைக்கிளில் மாணவ மாணவிகள் நாகர்கோவில் நகரின் முக்கிய பகுதியில் வழியாக வலம் வந்தனர்.
No comments:
Post a Comment