குடிப்பழக்கத்தை மனைவி தட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 June 2022

குடிப்பழக்கத்தை மனைவி தட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. குடிப்பழக்கத்தை மனைவி தட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் விபரீதம்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சங்கர் நகரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (55) இவரது மனைவி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.


ஜெயபிரகாஷ் கடந்த 2014ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளுக்கு ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் வேனில் செக்யூரிட்டி ஆக பணிபுரிந்து வந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று குடிபோதையில் வந்ததாகவும் இன்று காலை இதன் காரணமாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் வேதனையடைந்த ஜெயபிரகாஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 


இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment