சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட வைகாசி திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.


எட்டாம் நாள் திருவிழாவான இன்று மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து முத்திரிகிணற்றங்கரையில் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" என்ற கோஷம் முழங்க வைகுண்டசாமி கலிவேட்டையாடினார். தொடர்ந்து தலைமை பதி அருகே உள்ள செட்டிவிளை, சாஸ்தான்கோயில்விளை, சோட்டபணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக குதிரைவாகனத்தில் வந்த அய்யாவை பக்தர்கள் பூ பழம் போன்ற சுருள்வைத்து வழிபட்டனர். 

No comments:

Post a Comment