கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட பூதப்பாண்டி நெடுஞ்சாலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த அண்ணன் தங்கை நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த சாலை வழியாக வந்த வேன் அண்ணன் தங்கை வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் அண்ணன் தங்கை இருவரும் கீழே விழவே அவர்கள் மீது அந்த வழியாக வந்த லாரி ஏறி இறங்கியது, இதில் இருசக்கர வாகனத்தில் வந்த காட்டுப் புதூரைச்சேர்ந்த தங்கை ராஜேஸ்வரி (வயது 22) சம்பவ இடத்தில் உயிரிழந்தார், அவரது அண்ணன் மணிகண்டன் (வயது 27) விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழத்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இது தொடர்பாக விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர், காட்டுப்புதூர் இருந்து நாகர்கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு வந்த அண்ணன் தங்கை இருவரும் விபத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
No comments:
Post a Comment