கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் பசுமையை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற பசுமை தினத்தில் ஏராளமான சிறுவர் சிறுமியர் பூச்செடிகளையும் கனி தரும் மரங்களையும் ஆலய வளாகத்தில் கொண்டு வந்து நட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளத்தில் தாமரைகுளம் சேகர கஸ்பா ஆலயம் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விடுமுறை வேதாகம பள்ளி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பசுமையை பாதுகாக்கும் வகையில் பசுமை தினம்(Green day) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 200க்கும் மேற்பட்டோர் பச்சை நிறத்தில் உடை அணிந்து பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளை கொண்டு வந்து ஆலய வளாகத்தில் நட்டனர். சிறுவர்கள் வரிசையாக செடிகளை கொண்டு வளாகத்தில் நட்டது சமூக ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment