புதுக்கடை அருகே கடற்கரை பகுதியில் பாழடைந்த வீட்டில் பதுக்கிய ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 July 2022

புதுக்கடை அருகே கடற்கரை பகுதியில் பாழடைந்த வீட்டில் பதுக்கிய ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசி அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று புதுக்கடை அருகே ஹெலன் நகர் கடற்கரை கிராமத்தில் இருந்து கேரளாவுக்கு மானிய விலை அரிசி கடத்துவதாக கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரி வயோலா பாய்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவரது தலைமையில் அதிகாரிகள் ஹெலன் நகர் கடற்கரை கிராமத்தில் சோதனை நடத்தினர். 


அப்போது கடற்கரையில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டை சந்தேகப்பட்டு அந்த இடத்தில் சென்று  அந்த வீட்டை சோதனை செய்து பார்த்தபோது அங்கு சுமார் 200க்கு மேற்பட்ட மூட்டைகளில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்தது தெரியவந்துள்ளது பதுக்கிய நபர்கள் யார் என தெரியவில்லை அரிசியை பறிமுதல் செய்து  காப்புக்காடு பகுதியில் உள்ள அரசு குடோனில் கொண்டு ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

No comments:

Post a Comment