நித்திரவிளை அருகே 4 டன் கடத்தல் அரிசியுடன் 2 வாகனங்கள் பறிமுதல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 July 2022

நித்திரவிளை அருகே 4 டன் கடத்தல் அரிசியுடன் 2 வாகனங்கள் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக நெல்லை மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


அதன்பேரில் இன்று நித்ரவிளை தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ், மற்றும் காவல் நிலைய போலீசார்   விரிவிளை, மங்காடு, பகுதிகளில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது காலை 9 மணியளவில் குறிப்பிட்ட இரண்டு வாகனங்கள் வேகமாக வந்துள்ளது வாகனத்தை போலீசார் நிறுத்த கை அசைத்து நிறுத்தாமல் வாகனம் சென்றது. 


பின்னால் விரட்டி சென்ற போலீசார் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் நடைக்காவு ஆலங்கோடு பகுதியில் ஒரு அரசு பஸ் எதிரே வந்ததால் கடத்தல் வாகனங்களுக்கு முன்னே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 


இந்த சந்தர்ப்பத்தில் போலீசார் அரிசி கடத்தல் வாகனங்களை மடக்கிப் பிடித்தனர். இதில் சொகுசு கார் டிரைவர் சிக்கினார். டெம்போ டிரைவர் தப்பி ஓடினார். தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்று சோதனையிட்டபோது அதில் 2டன் வீதம் 4டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


பிடிபட்ட டிரைவர் மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 24) என்பவரிடம் நடத்திய விசாரணையில் இந்த அரிசி கடத்தலில் அதே பகுதி காஞ்சாம்புறம் என்ற இடத்தை சேர்ந்த 2பேருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவந்தது மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment