கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் கல்லடிவிளை சிவந்தமண் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரபா (42)இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ஒருவருக்கு திருமணம் முடிந்துவிட்டது மற்றொரு மகள் வெளியூரில் படித்து வருகிறார். இவருடைய தாத்தா சந்திரன்( வயது76) பிரபாவின் வீட்டுத் திண்ணையில் உறங்குவது வழக்கம். பிரபா பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும் அதனால் கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு வீட்டில் சத்தம் கேட்டதால் திண்ணையில் உறங்கிக்கிடந்த சந்திரன் கதவை திறந்து பார்த்தபோது பிரபா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிரபாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.
இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment