பின்னர் படைத் தளபதிகளுடன் குளச்சல் கடற்கரை சென்றார் திருவிதாங்கூர் படையினருக்கும் டச்சு படையினருக்கும் கடுமையான சண்டை நடந்தது.2 மாதங்கள் நடந்த சண்டை 1741 ஜூலை 31ம் தேதி முடிவுக்கு வந்தது திருவிதாங்கூர் படை டச்சுப் படையை வென்றது. கடற்கரையில் மாட்டு வண்டியில் பனைமரங்களை சாய்த்து பெரிய பீரங்கி போன்ற மன்னர் மார்த்தாண்ட வர்மா தந்திரம் செய்து டச்சு படையினரை சரணடைய செய்ததாக செவிவழி கதைகள் கூறப்படுகிறது.
இதற்கு குளச்சல் மீனவர்கள் மன்னருக்கு பெரும் உதவிகள் செய்தனர். இந்த போர் வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் குளச்சல் கடற்கரையில் போர் வெற்றித் தூண் ஒன்றை நிறுவினார். இன்றும் குலச்சல் நகராட்சியின் முத்திரையாக இது உள்ளது. குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்தப் போர் வெற்றி தூண் பராமரிக்கப்பட்டு வருகிறது போர் வெற்றியை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஓர் காட்சிகளை விளக்கும் சுவரில் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தூணில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் கடந்த சில வருடங்களாக ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்தப் போர் வெற்றியடைந்து நாளை281 வது ஆண்டு நிறைவு பெறுகிறது.இந்த விழாவில் முன்னாள் ராணுவத்தினர் நலத் துறை உதவி இயக்குனர் ஸ்ரீனிவாசன்,குளச்சல் காவல் கண்காணிப்பாளர் தங்க ராமன்,நகராட்சி ஆணையர் ஜீவா, குளச்சல் பங்குத்தந்தை டெனிசியஸ், ஆகியோர் வெற்றி உனக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார் இதில் கல்குளம் தாசில்தார் வினோத் குளச்சல் மறைமாவட்ட முதன்மை பணியாளர் பிரான்சிஸ், குளச்சல் காவல் நிலைய ஆய்வாளர் கிறிஸ்டி, விசைப்படகு சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், கவுன்சிலர் ராஜேந்திரன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment