கன்னியாகுமரி மாவட்டம் குமரி கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளையில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்த லாரியில் 13 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த அழகியபாண்டிபுரம் பகுதியை சேர்ந்த முத்து சிவன் (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திய போது அந்த அரசன் அரசி நெல்லை மற்றும் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல கொண்டு வந்தது என்பது தெரியவந்தது.
பின்னர் அரசு மற்றும் லாரியை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment