கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீர் கட்டி விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் சனல் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.
குளச்சல் காந்தி சந்திப்பில் செல்லும்போது அங்கு சந்தேகமாக 5 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர் அவர்களை போலீசார் நெருங்கி போகும் போது அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர் உடனே போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அந்த அந்த வாலிபர்கள் குளச்சல் ஆசாத் நகரை சேர்ந்த டேனியல் (21) மிடலாம் பகுதியை சேர்ந்த பிபின் (32) மத்தி கோட்டை சேர்ந்த அரவிந்த் (26) ஜெனித் (31) திக்கணங்கோடு புதூர் பகுதியை சேர்ந்த அஜித் (31) என்பது தெரியவந்தது தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் 11.50 கிலோ எடைகொண்ட திமிங்கல உமிழ் நீர் கட்டிகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
இதன் சந்தை மதிப்பு ரூபாய் 13 கோடி என கூறப்படுகிறது. உடனே போலீசார் அவர்களை வனச்சரக அலுவலர் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர். வனச்சரக அலுவலர்கள் விரைந்து வந்து வாலிபர்கள் பயன்படுத்திய கார், 2 பைக்குகள், மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் வாலிபர்கள் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment