மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா மாணவிகளுக்கு சமூக இணையதளத்தில் வரும் ஆபாச படங்களை ஷேர் செய்ய கூடாது அறிமுகமில்லாத பெண்களிடம் பழக கூடாது குறிப்பாக காதல் வசப்படக் கூடாது எவரேனும் காதல் கடிதம் தந்தால் அல்லது காதலிக்கிறேன் என மெசேஜ் அனுப்பினால் வீட்டில் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் பள்ளியில் ஆசிரியர்களிடம் கூறவேண்டும் தாய் தந்தையை தவிர வேறு யாரையும் நம்ப கூடாது படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் எதிர்காலத்தை பெற்றோர் அமைத்து தருவார். மாணவர்கள் கஞ்சா போதை பழக்கத்திற்கு ஆளாகி எதிர்கால வாழ்க்கையை சீரழிக்க கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பைக் ஓட்டும்போது அதிக வேகத்தில் செல்லக் கூடாது.
திருப்பம் வளைவுகளில் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.மகளிர் காவல் நிலையம் வந்த மாணவிகள் மகளிர் காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து தங்கள் சந்தேகங்களை மகளிர் போலீசாரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.
இதில் மகளிர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் எ மெல்டா ரோஸ், தலைமை காவலர்கள் விஜிலா ராணி, ஜேனட், பள்ளி ஆசிரியர்கள் சௌமியா, ரஞ்சித், காட்வின் ஜெபதாஸ், சிவ பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment