கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் கடல் பகுதிகள் கிழக்கு கடற்கரையில் உள்ளதால் அங்கு கடந்த ஏப்ரல்13 ம் தேதி முதல் ஜூன்15 வரை தடைக்காலம் அமலில் இருந்தது ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்கள் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது இந்த கடற்கரையில் கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவு வரை தடைக்காலம் அமலில் இருந்தது இதையடுத்து நேற்று காலை முதல் மேற்கு கடற்கரை பகுதியை படையினர் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதற்காக விசை படையினர் கடந்த சில நாட்களாக தயாராகி வந்தனர். இந்த நிலையில் கடலில் நேற்று முதல் 3 ம் தேதி வரை மணிக்கு 50 கி. மீ வேகம் வரை சூறைக் காற்று வீசும் என மின்துறை மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்தது ஆனால் இந்த தகவல் வருவதற்கு முன்பே விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று விட்டன மீன்பிடிப்பதற்கு சென்ற படகுகள் கடலில் வீசிய காற்றில் தொடர்ந்து படகை செலுத்த முடியாமல் பாதியிலேயே கரை திரும்பினர்.
நேற்று இரவு சுமார் 75 படகுகள் கரை திரும்பி குளச்சல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன மிதி படகுகள் அனைத்தும் இன்று காலை கரையை கடக்கும் கரை திரும்பிய விசைப்படகுகளில் ஓரளவு கணவாய் மீன்கள் கிடைத்தன, அவற்றை மீனவர்கள் 7 கூடத்தில் தரை இறக்கி விற்பனை செய்தனர். ஊசி கணவாய் கிலோ 400 என்ற விலையில் விற்றது விசைப்படகுகள் முதல் நாளிலேயே பாதியிலேயே சரி திரும்பியதால் டீசல் செலவு கூட விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கட்டுமரங்கள் வருடத்தின் அனைத்து நாட்களும் மீன்பிடிக்க செல்லும் பைபர் படகுகள் கடலில் வீசும் சூறைக்காற்று காரணமாக நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவை பாதுகாப்பாக மணற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளன கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லாததால் குளச்சலில் நேற்று மீன் வரத்து வெகுவாக குறைந்து அது இன்றும் கடலில் பலத்த காற்று வீசுவதால் இரண்டு நாட்களாக கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
No comments:
Post a Comment