நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கி வந்த அரசு பஸ்சை பூட்டேற்றி காந்தி நகர் பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 54) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் கருங்கல் அருகே பாலூர் சந்திப்பு பஸ் நிறுத்தம் பகுதியில் வரும் போது கொல்லங்கோடு கிராத்தூர் புன்னமூட்டு கடை பகுதியை சேர்ந்த ஜினு மோசஸ் (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஜினு மோசஸ், பின்னால் அமர்ந்திருந்த வள்ளவிலை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் (19) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர் உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கருங்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அரசு பஸ் டிரைவர்
வினுகானந்தன் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment