இதனால் பொதுமக்கள், வியசாயிகள், இப்பகுதியில் இயங்கி வரும் வருகின்ற காற்றாலைகளில் வேலை செய்கின்ற 1000-க்கும் பேற்பட்ட தொழிலாளர்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவிவருகிறது, மேலும் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் , கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் பெங்களூர் ரயில் மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் சில நேரங்களில் அறிவிக்கப்படுகின்ற சிறப்பு ரயில்களும் நின்று சென்றன.
இதனால் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளான செண்பகராமன் புதூர் தோவாளை தலாக்குடி உட்பட 4 பேரூராட்சிகள் 16 ஊராட்சிகளை சார்ந்த பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் வெளி மாவட்டத்தை சார்ந்த மாணவ மாணவிகளும் பயன்பட்டு வந்தனர்.இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ஆரல்வாய்மொழியில் நின்று சென்ற மேற்கண்ட ரயில்களை நிறுத்தாமல் ரத்து செய்துள்ளனர்.
ஆழ்வாய்மொழி ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் இருந்து இரண்டாவது நடைமேடைக்கு செல்வதற்கு மேம்பால அமைக்கும் பணி விரைவாக நடந்து முடிந்திட வேண்டும் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் முன்பதிவு டிக்கெட் முறையினை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரல்வாய்மொழி சந்திப்பில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனைத் தொடர்ந்து ஆராய்மொழி சந்திப்பிலிருந்து பேரணியாக சென்று ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் கோரிக்கை மனுவை அளித்தார்.
No comments:
Post a Comment