நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலால் அல்லல்படும் வாகன ஓட்டிகள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 August 2022

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட செட்டிகுளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு சந்திப்பு செல்லும் PWD சாலையில், சங்கரலிங்கம் மருத்துவமனை அருகே போக்குவரத்து காவல்துறையினரால் குறுகலான சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக அப்பகுதியில் தினந்தோறும் காலை, மாலை நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களும் ஏற்படுகிறது.மேலும் போக்குவரத்து போலீசாரும் அவ்வப்போது பணியில் ஈடுபடாததும்,ஒரு வழி பாதையில் வரும் அரசு பேருந்துகளாலும்  அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
 

இதன் காரணமாக இரவு நேரங்களில் பணிகள் முடிந்து வீடு திரும்பும் பணியாளர்கள் முதல் பொதுமக்கள் வரை கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறுகிய சாலையின் நடுவே போக்குவரத்து காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரால்தான் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.


இதற்கு  போக்குவரத்து போலீசாரின் முறையான கண்காணிப்பு மட்டுமே தீர்வாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்த பின்னரே, தடுப்புசுவர் அமைப்பது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment