சர்வதேச தடகள போட்டியில் 2 தங்கப்பதக்கம், ஒர் வெள்ளி பதக்கம் வென்ற குமரியை சேர்ந்த பெண் போலீஸுக்கு உற்சாக வரவேற்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 August 2022

சர்வதேச தடகள போட்டியில் 2 தங்கப்பதக்கம், ஒர் வெள்ளி பதக்கம் வென்ற குமரியை சேர்ந்த பெண் போலீஸுக்கு உற்சாக வரவேற்பு.

சர்வதேச அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டி நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதே போல குமரி மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வரும் கிருஷ்ண ரேகா என்பவரும் பங்கேற்றார். இவர் கடந்த 25-ம் தேதி உயரம் தாண்டுதல்  100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 3 முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்) ஆகிய தடகள போட்டிகளில்  பங்கேற்று 2 தங்கப்பதக்கம், ஒர் வெள்ளி பதக்கம் வென்றார்.  போட்டியில் வென்ற பின்பு இன்று குமரி மாவட்டம் கோட்டார் ரயில் நிலையத்தில் வந்தார். 


அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் மற்றும் காவல் துறை அதிகாரிகளும் போலீசாரும் வரவேற்றனர்.  சர்வதேச அளவில் தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய பெண் போலீசின் வரவேற்பு நிகழ்ச்சியால்  அப்பகுதி சிறித் நேரம் களைகட்டிய நிலையில் காணப்பட்டது. 


- தமிழக குரல் செய்திகளுக்காக குமரி மாவட்ட தலைமை செய்தியாளர் L.குமரன் மற்றும் ஒளிப்பதிவாளர் C.K.சாந்தி.

No comments:

Post a Comment