குமரி மாவட்டத்தில் மழை சற்றுகுறைந்ததால் மூன்று நாள்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 August 2022

குமரி மாவட்டத்தில் மழை சற்றுகுறைந்ததால் மூன்று நாள்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதி.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்த கனமழையால் கோதையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது இதனையடுத்து மாவட்டத்தின்  முக்கிய சுற்றுலாதலங்களுள் ஒன்றான திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க  பேரூராட்சி நிர்வாகம் தடைவித்திருந்தது.


இந்நிலையில் மூன்று  நாட்களுக்கு பிறகு இன்று மழை குறைந்ததால் கோதையாற்றில்  பாய்ந்த தண்ணீரின் அளவும் சற்று மிதமானது இதனையடுத்து திற்பரப்பு அருவியின் ஒரு பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிக்கபட்டது, அதைதொடர்த்து  குறைத்த அளவிலான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்த்தனர் எனினும் சாரல் மழை தொடர்த்து பெய்துவருவதாலும் காட்டாறுகளில் திடீரென வெள்ளம் வர வாய்ப்புள்ளாதாலும் அருவியின் முக்கிய பகுதிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.


- தமிழக குரல் செய்திகளுக்காக குமரி மாவட்ட தலைமை செய்தியாளர் L.குமரன் மற்றும் ஒளிப்பதிவாளர் C.K.சாந்தி.

No comments:

Post a Comment