நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு வடசேரியில் உள்ள டிஸ்லரி ரோட்டில் அமைந்துள்ளது, இந்த குடியிருப்பின் நுழைவாயிலில் தேசியக்கொடி வைக்கப்பட்டுள்ளது, இந்த தேசிய கொடியானது வீடு துடைக்க பயன்படுத்தும் துடைப்பை கம்பில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையர் குடியிருப்பை கடந்து செல்கின்ற பொதுமக்கள் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மற்றும் மாநகராட்சி பொறியாளர் குடியிருக்கும் குடியிருப்பில் நமது தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் துடைப்பை கம்பில் கட்டி வைத்திருப்பது ஐஏஎஸ் படித்தும் முட்டாளாக இருக்கின்ற நமது மாநகராட்சி ஆணையரின் கையாலாகாதனத்தை குறிப்பதாகவும் ஒரு புது கம்பு வாங்கி தேசியக்கொடி ஏற்றி வைக்க தெரியாதவர்கள் எல்லாம் நமக்கு ஆணையர் என்று சிலர் கோபத்துடனும் சிலர் பரியாசத்துடனும் கூறி கடந்து செல்கின்றனர், யார் இந்த தவறை செய்தது நடவடிக்கை எடுப்பாரா மாநகராட்சி ஆணையர்.
No comments:
Post a Comment