குமரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 August 2022

குமரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக வருகிற 4-ந் தேதி வரை ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 8 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. நாகர்கோவில்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் குமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே அதி கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராகி உள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


அதிலும் குறிப்பாக தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தீயணைப்பு வீரர்கள் பரிசோதித்து பார்த்து தயாராக வைத்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment