எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 August 2022

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்.

நாகர்கோவில் ராமவர்ம புரத்தில் உள்ள எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் தர்மராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் இதில் முன்னாள் சேர்மன் மீனாதேவ், தேவ், நகர தலைவர் நாகராஜன் மற்றும் கட்சிநிர்வாகிகள் கலந்துகொண்டனர் பின்பு தேசியக்கொடி வழங்கப்பட்டது. 


நாகர்கோவில் நகரில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி இன்று ஏற்றப்பட்டது. மேலும் நிர்வாகிகளும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இருந்தனர். அரசு அலுவலகங்களிலும் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. மீனாட்சிபுரம், வடசேரி, கோட்டார், செட்டிக்குளம் பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் முன்பும், கொடியேற்றப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், கார்களிலும் தேசிய கொடி கட்டப்பட்டி ருந்தது. 

No comments:

Post a Comment