கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் கோட்டை புரத்தை சேர்ந்தவர் பிஜு (46) இவரது மகன் சிபின் (17), 10ம் வகுப்பு படித்துள்ளார். நேற்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிபின் அவரது நண்பர் பிரைசன்(19) ஆகியோர் கன்னியாகுமரி செல்வதற்கு ஊரிலிருந்து பைக்கில் புறப்பட்டார் பைக்கை சிபின் ஓட்டினார் பின்னால் பிரிஷான் அமர்ந்திருந்தார். அவர்கள் கொல்லங்கோடு கருங்கள் குளச்சல் வழியாக கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டனர். உடன் வேறு 4 நண்பர்கள் பைக்கில் வந்தனர்.
குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் செல்லும் போது சிபின் சென்ற பைக் எதிர்பாராமல் நிலைதடுமாறி சாலையில் விழுந்தது.இதில் சிபின் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.
பின்னால் இருந்த பிரிஷான் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.இது குறித்து குளச்சல் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment